Coutesy: http://www.tamilheritage.in/
புதுக்கோட்டையின் பாரம்பரியம்
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு, அதற்கே உரிய சில தனிச் சிறப்புகள் உண்டு. இந்திய விடுதலையின்போது மன்னர் ஆட்சியின்கீழ் இருந்த புதுக்கோட்டைக்கு சங்க காலம் முதல் ஒரு வரலாறும் உண்டு.
இது கடந்த கால சமணத்தின் தடங்களைக் கொண்டுள்ளது. புதுக்கோட்டையை கோயில் கட்டடக்கலையின் அருங்காட்சியகம் என்று அழைக்கலாம். ஏனென்றால் இம்மாவட்டத்துக்கு குகைக்கோயில்கள் முதல் நவீன கோயில்கள் வரையான நீண்ட பாரம்பரியம் உள்ளது. திருமயத்தில் உள்ளஇரட்டைக் குகைக் கோயில்கள், நார்த்தாமலையில் உள்ள விஜயாலாய சோழீசுவரம்,கொடும்பாளூரில் உள்ள மூவர் கோயில், சித்தன்னவாசலில் உள்ள சமணர் குகை ஓவியங்கள்ஆகியவை உலகப் புகழ் பெற்றவை. புதுக்கோட்டைக் கோயில்களில் நுண்ணிய வேலைப்பாடுகளுடன்அமைந்த சிற்பங்கள், அம்மாவட்டத்துக்குப் பெருமை சேர்க்கின்றன.
ஏறக்குறைய 400 ஆண்டுகளாக இம்மாவட்டம் தொண்டைமான் அரசர்களின் ஆளுமையின்கீழ்இருந்தது. இசை, நாட்டியம், இலக்கியம், பண்பாடு ஆகியவற்றிற்கு அவர்கள் அளித்த ஆதரவின்காரணமாக, தமிழகத்தின் பாரம்பரியத்திற்கான அடிச்சுவடுகளை புதுக்கோட்டை மாவட்டத்தில்காணலாம்.
பேரா. சு. சுவாமிநாதன் - ஓர் அறிமுகம்
புதுக்கோட்டையைச் சேர்ந்தவரான சுவாமிநாதன், கலை, கலாசார ஆர்வலர். நம் மக்கள்அவர்களுடைய பாரம்பரியத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ளவேண்டும் என்னும் கருத்துஉடையவர். இயந்திரப் பொறியாளரான இவர், தில்லி ஐஐடியில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகப்பேராசிரியராக இருந்திருக்கிறார். தற்போது சென்னையில் வசிக்கும் இவர், தமிழ் பாரம்பரியஅறக்கட்டளை என்னும் அமைப்பை நிறுவி, அதன்மூலம் நம் கலாசாரத்தைப் பரப்பும் முயற்சியில்ஈடுபட்டிருக்கிறார். அஜந்தா ஓவியங்கள் குறித்து ஆராய்ச்சி செய்துள்ளார். பல்லவர்களின்மாமல்லபுரம் குறித்துத் தமிழிலும் ஆங்கிலத்திலும் புத்தகம் எழுதியுள்ளார். இவருடையமின்னஞ்சல் முகவரி sswami99@gmail.com
No comments :
Post a Comment