Sunday 20 July 2014

புதுக்கோட்டையின் கலை, பண்பாட்டுக் கூறுகள் - பேரா. சுவாமிநாதன்

Coutesy: http://www.tamilheritage.in/

புதுக்கோட்டையின் பாரம்பரியம்

புதுக்கோட்டை மாவட்டத்திற்குஅதற்கே உரிய சில தனிச் சிறப்புகள் உண்டுஇந்திய விடுதலையின்போது மன்னர் ஆட்சியின்கீழ் இருந்த புதுக்கோட்டைக்கு சங்க காலம் முதல் ஒரு வரலாறும் உண்டு.

இது கடந்த கால சமணத்தின் தடங்களைக் கொண்டுள்ளதுபுதுக்கோட்டையை கோயில் கட்டடக்கலையின் அருங்காட்சியகம் என்று அழைக்கலாம்ஏனென்றால் இம்மாவட்டத்துக்கு குகைக்கோயில்கள் முதல் நவீன கோயில்கள் வரையான நீண்ட பாரம்பரியம் உள்ளதுதிருமயத்தில் உள்ளஇரட்டைக் குகைக் கோயில்கள்நார்த்தாமலையில் உள்ள விஜயாலாய சோழீசுவரம்,கொடும்பாளூரில் உள்ள மூவர் கோயில்சித்தன்னவாசலில் உள்ள சமணர் குகை ஓவியங்கள்ஆகியவை உலகப் புகழ் பெற்றவைபுதுக்கோட்டைக் கோயில்களில் நுண்ணிய வேலைப்பாடுகளுடன்அமைந்த சிற்பங்கள்அம்மாவட்டத்துக்குப் பெருமை சேர்க்கின்றன.

ஏறக்குறைய 400 ஆண்டுகளாக இம்மாவட்டம் தொண்டைமான் அரசர்களின் ஆளுமையின்கீழ்இருந்ததுஇசைநாட்டியம்இலக்கியம்பண்பாடு ஆகியவற்றிற்கு அவர்கள் அளித்த ஆதரவின்காரணமாகதமிழகத்தின் பாரம்பரியத்திற்கான அடிச்சுவடுகளை புதுக்கோட்டை மாவட்டத்தில்காணலாம்

பேராசுசுவாமிநாதன் - ஓர் அறிமுகம்

புதுக்கோட்டையைச் சேர்ந்தவரான சுவாமிநாதன்கலைகலாசார ஆர்வலர்நம் மக்கள்அவர்களுடைய பாரம்பரியத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ளவேண்டும் என்னும் கருத்துஉடையவர்இயந்திரப் பொறியாளரான இவர்தில்லி ஐஐடியில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகப்பேராசிரியராக இருந்திருக்கிறார்தற்போது சென்னையில் வசிக்கும் இவர்தமிழ் பாரம்பரியஅறக்கட்டளை என்னும் அமைப்பை நிறுவிஅதன்மூலம் நம் கலாசாரத்தைப் பரப்பும் முயற்சியில்ஈடுபட்டிருக்கிறார்அஜந்தா  ஓவியங்கள் குறித்து ஆராய்ச்சி செய்துள்ளார்பல்லவர்களின்மாமல்லபுரம் குறித்துத் தமிழிலும் ஆங்கிலத்திலும் புத்தகம் எழுதியுள்ளார்இவருடையமின்னஞ்சல் முகவரி sswami99@gmail.com

No comments :

-

-