Tuesday 28 September 2010

அரிமழம் அரசு மேல்நிலைப்பள்ளி : நாட்டு நலப்பணித் திட்ட முகாம் (NSS Camp) 2010

நாட்டு நலப்பணித்திட்ட முகாம் அருகாமையில் உள்ள நெய்வாசல்பட்டி கிராமத்தில் 25.09.10 அன்று தொடங்கப்பட்டது. விழாவினை நெய்வாசல்பட்டி ஊராட்சி மன்ற தலைவி திருமதி. வள்ளிக்கண்ணு அவர்கள் துவக்கி வைத்தார்கள்.

விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. சிவகுருநாதன் (வேளாண்மை ஆசிரியர்) அவர்கள் சிறப்பாக செய்திருந்தார்.



விழாவில் நமது பள்ளி மேல்நிலை தொழிற்கல்வி ஆசிரியரும், முன்னாள் நாட்டுநலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளருமான திரு. ஹரிஹரன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்கள்.


விழாவில் நமது பள்ளி உயர்நிலை தலைமைஆசிரியர் திரு. கருப்பையா அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.


விழாவில் நெய்வாசல்பட்டி கிராம ஊராட்சிமன்ற துணைத்தலைவர் அவர்கள் சிறப்புரை  வழங்கினார்கள்.


விழாவில் நெய்வாசல்பட்டி கிராம ஊராட்சிமன்ற உறுப்பினர்கள் சிறப்புரை  வழங்கினார்கள்.

No comments :

-

-