Courtesy: Google Images |
பிளஸ் 2 செய்முறை தேர்வுகளை பிப்., 24 க்குள் நடத்தி முடிக்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் மார்ச் 2ல் துவங்கி 22ல் முடிவடைகிறது.
கணிதம், அறிவியல், புவியியல் போன்ற பாடப்பிரிவுகளில் படிக்கும் மாணவர்களுக்கான செய்முறை தேர்வு காலஅட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அனைத்து பள்ளிகளிலும் பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் துவங்கி 24க்குள் அனைத்து செய்முறை தேர்வுகளையும் நடத்தி முடிக்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பிப்., 24ல் தேர்வுத்தாள்களை அனுப்பி வைக்கவும் அதில் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் மூன்று லட்சம் மாணவ, மாணவியர் செய்முறை தேர்வு எழுத உள்ளனர்.
No comments :
Post a Comment