Friday 18 October 2013

வள்ளியப்பன் அய்யா நினைவுப் பரிசு


வள்ளியப்பன் அய்யா நினைவுப் பரிசு



நம் அரிமளம் மண்ணின் மைந்தன், சென்னை ஐ.ஓ.பி வங்கிக் கிளையின் முன்னாள் மேலாளர், காலஞ்சென்ற அய்யா  தெய்வத்திரு. வள்ளியப்பன் அவர்களின் நினைவாக இந்த கல்வி ஆண்டு முதல் நம் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் சிறப்புப் பரிசுகள் வழங்கப்படவுள்ளது.


அமெரிக்காவில் வசிக்கும் வள்ளியப்பன் அய்யாவின் புதல்வர்களால் இப்பரிசுகள் வழங்கப்படவுள்ளன. 

வள்ளியப்பன் அய்யாவின் பிறந்த தினமான  6 ஜீன் 2014 அன்று பள்ளியில் வழங்கப்படும். 

பரிசுகள் அனைத்தும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி முடிவுகள் அடிப்படையில் பரிசீலித்து வழங்கப்படும்.  பரிசுகள் 4 பிரிவுகளாக வழங்கப்படுகிறது.


சிறப்பாக பணியாற்றும் ஆசிரியருக்கு பரிசு..


1. சிறந்த கணித,அறிவியல் ஆசிரியர்                                                                  ரூ. 10,000

     குறிப்பிட்ட பாடத்தில் அதிகபட்ச சராசரி மதிப்பெண்

     (கணிதம் / இயற்பியல் / வேதியியல் / உயிரியல் / மின்னியல்)



சிறப்பாக படிக்கும் மாணவர்களுக்கு பரிசு..



2. சிறந்த மாணவன் - முதல் பரிசு                                                                          ரூ. 10,000

    (முதல் மருத்துவ/பொறியியல் கட் ஆப் மதிப்பெண்)


3. சிறந்த மாணவன் - இரண்டாம் பரிசு                                                                   ரூ. 6,000

    (இரண்டாம் மருத்துவ/பொறியியல் கட் ஆப் மதிப்பெண்)


4. சிறந்த மாணவன் - மூன்றாம் பரிசு                                                                     ரூ. 4,000

    (மூன்றாம் மருத்துவ/பொறியியல் கட் ஆப் மதிப்பெண்)


இப்பரிசுகள் வழங்கப்படுவதன் நோக்கம், தெய்வத்திரு வள்ளியப்பன் அய்யா அவர்களின் ஆசைப்படி நம் பள்ளியிலிருந்து எண்ணற்ற தகுதியும், திறமையும் மிக்க மருத்துவர்களும், பொறியாளர்களும் வருங்காலத்தில் உருவாக வேண்டும் என்பதே.! இதன் மூலம் நாட்டுக்கும், நம் பள்ளிக்கும் மாணவர்கள் பெருமை தேடி தரவேண்டும்.! என்ற உயரிய சிந்தனையுடன் இப்பரிசுகள் வழங்கப்படுகிறது.

அத்துடன் நம் அரசு மேல்நிலைப்பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கடின உழைப்ப ஊக்குவிக்கும் விதமாகவும் இப்பரிசுகள் உள்ளன.

இப்பரிசினை அறிவித்தமைக்கு, தெய்வத்திரு. வள்ளியப்பன் அய்யா குடும்பத்தார்களுக்கு எங்களது நெஞ்சார்ந்த மனமார்ந்த நன்றியை காணிக்கையாக்குகிறோம். 

No comments :

-

-