Wednesday 2 March 2016

பல்திறன் படைப்பாற்றல் கண்காட்சி


ஆங்கில இலக்கிய மன்றம் சார்பில் அரிமளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான ‘பல்திறன் படைப்பாற்றல் கண்காட்சி’ நடைபெற்றது. கண்காட்சியை பள்ளித்தலைமை ஆசிரியர் ஆர் சண்முகம் தொடக்கி வைத்துப் பார்வையிட்டார். மாணவர்களின் வியத்தகு திறமைகளை பாராட்டினார். மாணவர்கள்  தங்கள் படைப்புகளை விளக்கிய விதத்தினையும் காட்சிப்படுத்தியிருந்த ஆவணங்களையும் அவர்களது ஆர்வத்தினையும் பாராட்டியதோடு சிறந்த படைப்புகளுக்கு பரிசுகளையும் வழங்கி மாணவர்களை ஊக்குவித்தார்.




கண்காட்சியில் சிவகமலம் மெட்ரிக் பள்ளி முதல்வர் சிவகுமார் கலந்துகொண்டு பார்வையிட்டு, தனியார் பள்ளிகளையும் விஞ்சும் அளவுக்கு மாணவர் படைப்பு இருந்ததாக பாராட்டினார். அறிவியல், தொழில்நுட்பம், இலக்கியம், விவசாயம், பழங்கால நாணயங்கள், பல நாடுகளின் ரூபாய் நோட்டுகள், அரியவகை தபால்தலைகள், மூலிகைத்தாவரங்கள் பற்றியவை காட்சிக்கு வைக்கபட்டிருந்தன.





கண்காட்சியை பிற பள்ளி மாணவர்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேலான மாணவர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். ஆசிரியர்கள் சிவகுருநாதன், ராஜா வழிகாட்டுதலில் ஆங்கில ஆசிரியர் ஆண்டனி ஒருங்கிணைத்தார்.

No comments :

-

-