Friday 18 June 2010

அரிமழம் அரசு மேல்நிலைப்பள்ளி : தலைமையாசிரியர் ஓய்வு

நமது பள்ளியில் கடந்த 6 ஆண்டு காலமாக தலைமையாசிரியராக பணியாற்றி வந்த திரு. சார்லஸ் சாமுவேல் அவர்கள் கடந்த 30.05.2010 அன்று பணியிலிருந்து ஓய்வு பெற்றார். 

இவர் நமது அரிமழம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 14 ஆண்டு காலம் அரசியல் அறிவியல் (POLITICAL SCIENCE) துறை ஆசிரியராகவும், 7 ஆண்டு காலம் உதவி தலைமையாசிரியராகவும் பணி புரிந்துள்ளார். இவரது காலத்தில் தான் நமது பள்ளியின் தேர்ச்சி விகிதம் கணிசமாக உயந்தது என்பது மறுக்க முடியாத கூற்றாகும்.

மேலும் நமது பள்ளியில் 6-லிருந்து 10-ம் வகுப்பு வரை ஆங்கில வழிக்கல்வியை கொண்டு வந்த பெருமை இவரையே சாரும். இந்த ஆண்டு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் நமது பள்ளி மாணவி சூர்யா 483/500 (ஆங்கில வழிக்கல்வி) மதிப்பெண் எடுத்து மாவட்ட அளவில் நமக்கும், நமது பள்ளிக்கும் பெருமை சேர்த்ததை யாவரும் அறிவர்.

திரு. சார்லஸ் சாமுவேல் அவர்கள் இன்று போல எல்லா வளமும் பெற்று நீடுடி வாழ வாழ்த்தும் & வணங்கும் இளநெஞ்சங்கள்...

No comments :

-

-