Friday 2 September 2016

மழையினால் பாதிக்கப்பட்டுள்ள பள்ளிக்கட்டிடங்கள் நிலை

நம் பள்ளியில் சில கட்டிடங்கள் தற்போது பெய்த மழையின் காரணமாக சேதமடைந்துள்ளது. வகுப்பறை முழுவதும் மழை நீர் தேங்கி கிடப்பதால்  மாணவர்கள் வகுப்பறையில் அமர முடியாத நிலை காணப்படுகிறது. மேற்கூரையில் நீர் தேங்கி இருப்பதால் ஒரு வாரம் வரை பாட வகுப்புகள் அனைத்தும் பாதிக்கப்படுகிறது. 

இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கவனத்திற்கும், அரசின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இருப்பினும் உடனடியாக சரிசெய்யும் பொருட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டி இருப்பதால் பள்ளியின் நிலை குறித்து இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.


இதை சரி செய்து தர முன்வரும் பள்ளியின் பழைய மாணவர்கள், தன்னார்வலர்கள், வெளிநாடு வாழ் நண்பர்கள், ஊர்காரர்கள் உடனடியாக பள்ளியின் தலைமை ஆசிரியர், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் & கல்விக்குழு தலைவர் ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.

தங்களால் முடிந்த அளவு உதவி செய்து பள்ளியின் வளர்ச்சியில் பங்கெடுத்துக்கொள்ளலாம். உங்களது நண்பர்களுக்கும் இத்தகவலை பகிர்ந்து வேண்டிய உதவிகள் செய்ய அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.











No comments :

-

-